சென்னை:
மிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நிச்சயமாக உறுதியாக கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறினார்.