நடிகை வனிதா பீட்டர் பால் திருமணம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி மற்றும் சூரியாதேவி, டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் விமர்சித்தனர். 4 பேர் மீதும் போலீஸில் புகார் அளித்தார் வனிதா. புகாரின்பேரில் சூரியா தேவி கைதாகி ஜாமினில் வெளியில் வந்தார்.


இந்நிலையில் நடிகை வனிதா தனது இணைய தள பக்கத்தில் டைரக்டர் நாஞ்சில் விஜயன் தன்னிடம் தொலைபேசியில் பேசி மன்னிப்பு கேட்டதாகவும் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்,
தற்போது நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், ’ ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்னையை சந்திக்க தயாராக இருங்கள்’ என தெரிவித்திருக்கிறார்.
இந்த டிவிட் மெசேஜை நடிகை கஸ்தூரி ரீடிவிட் செய்து. ‘எனது அனுபவத்தில், வனிதா மேடம் சொன்னதுல பொய்தான் அதிகம். அவருக்கு பொய் சொல்லும் நோய்’ என்று தெரிவித்துல்ளார். எதற்கெடுத்தாலும் உடனடியாக பதிலடி கொடுக்கும் வனிதா தற்போது இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
ஆனால் மறைமுகமாக அளித்துள்ள பதிலில் ’நான் ரொம்ப சந்தோஷமாக உள்ளேன். யாரைப் பற்றியும் கவலையில்லை. நானாக உங்களி டம் வராவிட்டால் என்னை ஒருபோதும் நீங்கள் பெற மாட்டீர்கள். என்னுடயை எதிர்ப்பாளர்கள்தான் எனது ஊக்குவிப்பாளர்கள்’ என குறிப்பிடிருக் கிறார் வனிதா.