சென்னை: பள்ளிகளில் மழையை காரணம் காட்டி விடுமுறை விடப்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி தொடங்குவதற்கு 3மணி நேரத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழை மற்றும் சாலைகள், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தற்போது  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அதை காரணம் காட்டி கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை அளிப்பது குறித்து 7 வகையான விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 மேலும், துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும்  என்றும் அறிவுறுத்தி உள்ளது.

விதிமுறைகள்:

  1. அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  2. லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும்.
  3. மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  4. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  5. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  6. விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  7. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.