டெல்லி: மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது. அதற்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகலாம், இவை இரண்டும் மேலும் தீவிரமடைந்து புயல்களாக மாறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று தீவிர புயலாகவும் மாறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நவம்பர் 18ம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது புயலாக உருவானால் மாலத்தீவுகள் பரிந்துரைத்த “மிதிலி” என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,   தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  மோக்கா, ஹாமூன் என இரு  புயல்கள் உருவான நிலையில் தற்போது மிதிலி என்ற மூன்றாவது புயல் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் மேலும் ஒரு மேல் காற்று சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இரண்டாவது குறைந்த அழுத்தப் பகுதியின் ஒரே நேரத்தில் உருவாக்கம் முந்தைய அமைப்புடன் அதன் தொடர்புக்கு வழிவகுக்கும். அத்தகைய தொடர்பு புஜிவாரா விளைவு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கடல் புயல்கள் (புயல்கள், சூறாவளி, சூறாவளி அல்லது சூறாவளி) ஒரே பகுதியில் உருவாகி, ஒரே திசையில் சுழன்று, ஒன்றோடொன்று நெருங்கிச் செல்லும் போது, “அவை அவற்றின் பொதுவான மையத்தைச் சுற்றி ஒரு தீவிர நடனத்தைத் தொடங்குகின்றன” என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.

புயல்களில் ஒன்று மற்றொன்றை விட மிகவும் வலுவாகவும் பெரியதாகவும் இருந்தால், சிறியது பெரிய ஒன்றைச் சுற்றி சுழன்று, “உறிஞ்சப்படுவதற்காக அதன் சுழலில் மோதிக்கொண்டு வரும்”. “இரண்டு புயல்கள் ஒரு பொதுவான புள்ளியை அடைந்து ஒன்றிணைக்கும் வரை ஒன்றையொன்று நோக்கி இழுத்துச் செல்லலாம் அல்லது தங்கள் சொந்த பாதையில் சிறிது நேரம் ஒன்றையொன்று சுழற்றலாம். அரிதான சந்தர்ப்பங்களில், சூறாவளிகள் ஒன்றாக வரும்போது விளைவு சேர்க்கையாக இருக்கும், இதன் விளைவாக இரண்டு சிறிய புயல்களுக்கு பதிலாக ஒரு பெரிய புயல் உருவாகிறது” என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் வானிலை சேவை கூறுகிறது.