சென்னை: இந்துக்கள் குறித்து அவதூறாக விமர்சித்த, அரசியல் விபச்சாரியின் மகன் ராசாவின் நாக்கை அறுத்துக்கொண்டு வரும் காவி ஆண்மகனுக்கு ஒரு கோடி பரிசு என  இந்து மக்கள் புரட்சி படையின் மாநில அமைப்பாளர் கண்ணன் அறிவித்திருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், இந்துக்கள் குறித்து அவதூறாக விமர்சித்த ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு  ஒரு கோடி ரூபாயும் ஒரு ஏக்கர்  நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்து மக்கள் புரட்சி படையின் மாநில அமைப்பாளர் கண்ணன் அறிவித்திருந்தார்.  இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

அண்மையில் திராவிடர் கழக தலைவர்  வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய திமுக எம்பி ஆ. ராசா,  இந்து மதம் குறித்து மிகவும் அவதூறாக பேசி விட்டதாக இந்துக்கள் கொதித்தெழுந்து உள்ளனர்.   பாஜகவினர் தமிழகமும் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஆ.  ராசாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்து வருகின்றனர்.  ஆ.  ராசாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த  புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருகின்றன. சமுக நீதி காத்த அரசு என கூறும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்துவிரோத அரசாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றன.

இதற்கிடையில், ராசாவுக்கு எதிராக பேசிய கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே முதல்வர், அவரது மனைவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி  பேச்சிமுத்து என்பவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் மாநிலம் முழுவதும் இந்துக்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த சூழலில்தான்,  திமுக எம்பி ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த இந்து மக்கள் புரட்சி படையின் மாநில அமைப்பாளர் கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அந்நிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்பி ஆ. ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம்.  இந்துக்களை விபச்சாரிகள் எனக் கூறி வரும் அரசியல் விபச்சாரியே… இந்த அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ஒரு கோடி ரூபாய் பணமும்,  ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக  திமுகவினர் அளித்த புகார் இன் பேரில் உத்தப்ப நாயக்கனூர் போலீசார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.