சென்னை

டிகை ஜோதிகா இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் வசனம் ஒன்றை நாச்சியார் படத்தில் பேசியதாக இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் என்னும் படம் வெளியாகியது.    இந்தப் படத்தில் டீசர் வெளியான நேரத்தில் ஜோதிகா பேசிய வசனம் கடும் சர்ச்சையை கிளப்பியது.  தற்போது இந்தப் படம் வெளியாகிய பிறகு ஜோதிகா பேசிய மற்றொரு வசனம் அடுத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி பிரசார அணித்தலைவர் காளிகுமார் என்பவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர், “பாலா இயக்கத்தில் வெளியாகி உள்ள நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  அவர் ஒரு காட்சியில், ‘கோவிலாக இருந்தாலும் குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்’ என வசனம் பேசுகிறார்.

இந்து ஆலயங்களை அவமதிக்கும் இந்த வசனத்தை நீக்க வேண்டும்.  இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும்.  நடிகை ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.