மதுரை: பாஜக முகவரால் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்ட மதுரை மேலூர் 8வது வார்டில் திமுக வேட்பாளர் யாசின் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் பாஜகவுக்கு வெறும் 10 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

‘மதுரையை அடுத்த மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டுக்கான தேர்தல், அங்குள்ள அல்அமீன் பள்ளியில் நடைபெற்றது. அங்கு வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களை ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்கும்படியும், அப்போதுதான் வாக்களிப்பவர்களும், வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்களும் ஒரே ஆளா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருந்த  பாஜக முகவர் கிரிராஜன் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கிரிராஜன் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யாசின் பெருவாரியான வாக்குகள் பெற்று வெறிற் பெற்றுள்ளார்.