ருண் விஜய் நடிக்கும் படம் பாக்ஸர் இப்படத்துக்காக சிக்ஸ்பேக் உடற் கட்டுக்கு மாறினார் அருண். ரித்விகா சிங் ஹீரோயின். இப்படத்தில் வில்லன் வேடத்துக்கு நடிகரை தேடிய நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே நடிக்க முடிவானது.


இது குறித்த எக்ஸெட்ரா என்ட்டர் டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி.மதிய ழகன் கூறியதாவது:
பாக்ஸர் படத்தைத் தொடங்கியபோது, இது போன்ற திட்டம் எதுவுமில்லை. எதிர்மறை வேடத்திற்கு உயிரூட்டக்கூடிய சரியான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நானும் ஈடுபட்டேன். இறுதி யில் இயக்குநர் விவேக் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்றார். நான் ஏற்க தயங்கினேன். டெஸ்ட் ஷுட் நடத்தி சில காட்சிகளைப் பார்த்த பின் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயினும் அருண் விஜய், ரித்விகா சிங் மற்றும் பல சீனியர் நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. மேலும், பலம் பொருந்திய நபருடன் குத்துச் சண்டை போடுவது போலல்ல இந்த வேடம். தன் இலக்கை அடையத் துடிக்கும் நாயகனுக்கு தடை போட்டு, குறுக்கே நிற்கும் வேடம் என்பதால் படக்குழுவினரின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் நடிக்கிறேன்.
3 வெவ்வேறு தோற்றங்களில் அருண் விஜய் சார் நடிகிறார். 0கோவிட் 19 பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் படப்பிடிப்பை நடக்க உள்ளது.
இவ்வாறு மதியழகன் கூறினார்.
தயாரிப்பாளரே வில்லனாக நடிப்பது அருண் விஜய்க்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம். இதனால் பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு பற்றி அதிகார பூர்வமாக தானே அறிவிக்க உள்ளதாக ஒரு மெசேஜில் தெரிவித்திருக்கிறார்.