செங்கல்பட்டு’

செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை குறித்த புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  நகரின் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் எண் – 9444272345, கட்டணமில்லா தொலைப்பேசி எண் – 1077, தொலைப்பேசி எண்கள் – 044 – 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.