சென்னை: 
ன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும். தென்காசி மாவட்டத்திலும் நாளை மிக கனமழை பெய்யலாம். சேலம், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.