டில்லி:

தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் மிக மிக அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.