சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:  வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் எதிரொலியாக, தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

கடலூா், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும். வரும் 23,24 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.