சென்னை

சென்னை வானிலைஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

நாளை மறுநாள் கத்தரி வெயில் என்ன்ம் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும், அதில் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர உள்மாவட்டங்களிலும் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.