செங்கல்பட்டு: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேளம்பாக்கத்தில் உள்ள  சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதுமுன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில், உடல்நலப் பாதிப்பு காரணமாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபாவை கைது செய்ய தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் அங்கு சென்றனர். இந்த நிலையில், அவர் அங்கிருந்து வெளியேறி டெல்லியில் உள்ள காசியாபாத் பகுதியில் தங்கியிருந்தார். அங்கு சென்ற தமிழக போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். நேற்று  தெரியவர, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.

பின்னர், தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர். டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். பின்னர், நேற்று முன்தினம் சிவசங்கர் பாபாவை  டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர்.

இதனால், சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்காரணமாக,சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக, விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைச் சென்று மருத்துவச் சான்றிதழ் பெற்றனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட , சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். இந்நிலையில்,சிவசங்கர் பாபாவுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.