முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், “நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணையத் தொடர். இன்று ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன், தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப் பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர், தல, தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.