சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனப்டி, நாளை (டிசம்பர் 23ந்தேதி) முதல் ஜனவரி 1ந்தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஜனவரி 2-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மழை வெள்ளம் காரணமாக  அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் பள்ளிகள் திறந்த பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் தேர்வுகள் முடிவடைந்து, அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படுகிறத.

முன்னதாக மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.  அதைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று முடிகிறது. நாளை (23-ந்தேதி) முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று மாலையுடன் தேர்வு முடிந்து விடுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது.