சேலம்: சேலத்தில் குட்கா போதைப்பொருள் விற்பனை செய்த இந்து முன்னணியை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் குட்கா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், அதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வருகிறது. இருந்தாலும், பெட்டி கடைகளிலும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும் குட்கா மட்டுமின்றி கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டையில், கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், குட்கா போதை பொருட்களையும் கடைகளுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நிர்வாகி  கிருஷ்ணமூர்த்தி என்பதும், அவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.