காந்திநகர்: சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை, அந்த தேவாலயத்தை நிர்வகித்து வரும் பாதிரியார், தனது மனைவி உடந்தையுடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை பாதிரியாரின் மனைவி வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி அந்த சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு செய்ய வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகாரில், பாதிரியாரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிறுமிகள் மற்றும் பெண்களிடம்  பாலியல்  தொல்லை கொடுப்பதில் மட்டும் எந்தவொரு சாமியாரும் சாதி, மதம் பார்ப்பதில்லை போலும். இவர்களைப் போன்றோரை எந்தவித சமரசமின்றி, விசாரணையின்றி தூக்கிலேற்ற வேண்டும்.

குஜராத் மாநிலம் தபி மாவட்டம் சோன்காத் தாலுகாவில் உள்ள கோக்னி கிராமம் பகுதியில் அமைந்துள்ள சர்ச் ஒன்றில் அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வழிபாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அதுபோல,  தனது பெற்றோருடன் வழிபாட்டுக்கு சென்ற 16 வயது சிறுமியை மடக்கிய பாதிரியார் பலிராம், அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அடிக்கடி தேவாலயத்துக்கு வரும்படி கூறியுள்ளார். பின்னர் சிறுமி குடும்பத்தின் கஷ்டத்தை போக்குவதாக கூறி, தனது விவசாய பண்ணைக்கு வேலைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

பாதிரியாரின் வஞ்சக பேச்சை உணராமல் அங்கு வேலைக்கு சென்ற சிறுமியை சம்பவத்தன்று கொடூர மனம் படைத்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இந்த சம்பவத்துக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததுடன்,  தனது மொபைல் போனில் வீடியோவாகவும், புகைப்படங்களும் எடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி அந்தசிறுமியை மிரட்டி  வன்புணர்வு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாதிரியாரின் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்றதால், தாக்க முடியாத சிறுமி, கடந்த வாரம் அருகே உள்ள காவல் நிலையத்தில் குடும்பத்தோடு சென்று புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, அதிரடியா களத்தில் இறங்கி,   பாதிரியாரையும், அவரின் மனைவி அனிதாவையும் செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 4 நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.