சென்னை: ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தேதியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் 4ந்தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,  தேர்வு நடத்தப்படும் என கடந்த அக்டோபர் 25 -ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,  தேர்வு ஜனவரி 7ந்தேதி நடைபெறும் என்றும்,   இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்   ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தேர்வு தேதி மாற்றி அறிவித்து உள்ளது.   ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வுக்கு தயாராவதில் சிரமம் இருப்பதாக கோரிக்கை எழுந்த நிலையில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.