டெல்லி: குற்ற வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு இனிமேல் ஆதார் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.  சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்   பார்வையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என  உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கைதிகளின் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான காவலை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் புதிய முயற்சியைத் தொடர்ந்து, அனைத்து கைதிகளும் அவர்களது பார்வையாளர்களும் இப்போது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறை கைதிகள் மற்றும் அவர்களது பார்வையாளர்களின் ஆதார் இணைப்பு அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை SOP ஆவணத்தை தேசிய தகவல் மையத்தின் NIC மற்றும் ePrisons குழு தயாரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அந்த அறிக்கையில்,   ‘அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறைக் கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களுக்கு ஆதாா் இணைப்பு அல்லது ஆதாா் அங்கீகாரத்துக்கான வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) தேசிய தகவல் மையமும், எண்ம-சிறைகள் குழுவும் தயாரித்துள்ளன.

இந்த ஆதாா் அங்கீகார வசதியைப் பயன்படுத்தி சிறைகளில் கைதிகளின் காவலை வலுப்படுத்தவும் மற்றும் ஆதாரின் உரிய பலன்களை அவா்கள் பெறுவதை உறுதி செய்யவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச சிறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

எனினும், அங்கீகாரத்துக்காக ஆதாா் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் இந்த நடைமுறையில் மத்திய அரசு அவ்வப்போது வகுக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் சிறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, சிறைக் கைதிகள் மற்றும் அவா்களுடைய பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2023ம்  ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்குத் தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச் மற்றும் செப்டம்பா் மாதங்களில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.