சென்னை

பொதுத் தேர்வை முன்னிட்டு சென்னையில் 41 வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா கட்டுக்குள் வராததால் இந்த ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டது.

தற்போதைய ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்கள் தவிர தமிழகத்தில்  மற்ற இடங்களில்  கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இம்மாதம் மாநில 10  ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன

இதையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வசதிக்காகச் சென்னையில் 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன,

இந்த தகவலை அறிவித்த முதன்மை கல்வி அலுவலர் அனிதா வரும் 8 ஆம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிக்கு வர  பேருந்துகள் இயங்கும் எனக் கூறி உள்ளார்.