சென்னை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கு  பத்திரிகையாளர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்களை வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களுக்கு  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளாக இணைத்து அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழகஅரசின் அறிவிப்புக்கு ஊடகவியலாளர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.