சென்னை: பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதுபோல லஞ்ச லாவண்யங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க உயர்அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த ஐஏஎஸ் அதிகாரி  ஓய்வுபெற்ற நிலையிலும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  புகார் கொடுத்த காலத்தில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியதுடன்,  மக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

மேலும் மக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது