சென்னை: நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் அதிகாரம் வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: நகராட்சி,  மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. அதில், நகராட்சி, மாநகராட்சி அதிகாரி களுக்கு கூடுதல் அதிகாரம்மாநகராட்சி பொது நிதிகளை 30 லட்ச ரூபாய் வரை பயன்படுத்த மேயர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 50 லட்சம் வரை நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநாகராட்சி ஆணையர் பல்வேறு பணிகளுக்காக ரூ.10 லட்சம் வரை  ஒதுக்க அனுமதி வழங்க  இருந்த நிலையில், அந்த  அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாநாகராட்சி ஆணையர் தற்போது ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்க அனுமதி வழங்கும் அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு அரசனை பிறப்பித்துள்ளது. பத்து கோடிக்கு மேலான பணிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.