சென்னை:
20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியான உத்தரவில்,

  • நாகை ஆட்சியராக உள்ள பிரவின் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநராக நியமனம்
  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக அன்ஷுல் மிஸ்ரா நியமனம்
  • விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராக நியமனம்
  • திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள், பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜியாக மாற்றம்
  • கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், நில நிர்வாக ஆணையராக மாற்றம்
  • திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றம்
  • திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம்
  • பேரூராட்சிகள் ஆணையராக செல்வராஜ் நியமனம்
  • ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.