சென்னை

இன்று முதல் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைப்பதைப் போல் சமையல் எரிவாயு விலை மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.   ஆனால் ஒரே மாதத்தில் 3 முதல் 4 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அவ்வகையில் இன்று முதல் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது.  அதாவது இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.850.50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.  தற்போது அது ரூ.875.50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.