சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள  20பொருட்களுடன் கூடிய பொங்கல் தொகுப்பில், முழு கரும்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு,  அரிசி, நெய், வெல்லம் உள்பட 20 பொருட்கள் அடங்கிய, பொங்குல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிப்பில் கரும்பு இடம்பெறாதது கேள்விக்குறியாது.  பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் கடலூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியளார்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவத,

“பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் என்று கூறினார்.

இந்த பொங்கல் தொகுதிப்பில்,

  1. பச்சரிசி,
  2. வெல்லம்,
  3. முந்திரி,
  4. திராட்சை,
  5. ஏலக்காய்,
  6. பாசிப்பருப்பு,
  7. நெய்,
  8. மஞ்சள் தூள்,
  9. மிளகாய் தூள்,
  10. மல்லித் தூள்,
  11. கடுகு,
  12. சீரகம்,
  13. மிளகு,
  14. புளி,
  15. கடலைப்பருப்பு,
  16. உளுந்தம் பருப்பு,
  17. ரவை,
  18. கோதுமை மாவு,
  19. உப்பு,
  20. துணிப்பை

ஆகிய 20 பொருட்களுடன் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்றார்.

பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்போது,  ரேஷன் கடைகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப டோக்கன் கொடுத்து வழங்கப்படும் என்றும், அதை,  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வார்கள் என்று கூறினார்.