சென்னை

ன்று முதல் அமுதம் அங்காடிகளில் துவரம்பருப்பு, தக்காளி, உளுத்தம்பருப்பு உள்ளிட்டவை கொள்முதல் விலையில் விற்கப்பட உள்ளது.

இன்று முதல் சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுத்துறை சார்பில் பொதுமக்களின் நலன் கருதி கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.