சென்னை

ன்று முதல் மீண்டும் சேலம் – சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்குகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகம் கடுமையாகப் பாதிப்பு அடைந்தது.  இதையொட்டி தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  ஆயினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.  இதையொட்டி கடந்த மாதம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலாக்கப்பட்டது.

அனைத்து போக்குவரத்து சேவைகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன.  அவ்வகையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமானச் சேவை முழுவதுமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.  இதனால் பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

எனவே அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விமானச் சேவையைத் தொடங்க பல பயணிகள் கோரிக்கை விடுத்தனர். எனவே ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் சேலம் சென்னை இடையே விமானச் சேவை தொடங்க உள்ளது.