சென்னை: மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர், பெட்ரோல் , வெங்காயம் போன்றவற்றை நண்பர்கள் பரிசளித்தனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ நெருங்கி உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.785 ஆக உயர்ந்துள்ளது. இதனால், வாகனங்களின் வாடகைக் கட்டணம் உயர்ந்துள்ளதால், உணவுப்பொருட்கள், காய்கறிகளின்  விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு முக்கிய தேவையான வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில்  மதுரவாயலில் நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு உருளை (சமையல் கேஸ்) வழங்கினர். நண்பர்களின் வித்தியாசமான அன்பளிப்பை மணமக்களும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்‘

இது அங்கு திரண்டிந்தவர்களிடையே சிரிப்பலையை உருவாக்கினாலும், அவர்களின் செயல் பெரும்பாலோரானல் பாராட்டப்பட்டது.