சென்னை:
ணவகத்தில் இலவச கழிப்பிட வசதி அமைக்கப்பட வேண்டுமே என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.

அதில், உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் . பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும் என்றும், உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி உணவகத்தில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.