சென்னை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கின் தீர்ப்பு வழங்கலாம் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பணியின் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ் ஐபிஎஸ். இவர் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி அவருக்கு   3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ்  சிறப்பு நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தார். மேலும், ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.