சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்ற நிலையில்., அவரது வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணியின் கோவை வீடு, தொண்டாமுத்தூர் பண்ணை வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, வடவள்ளி சந்திரசேகர், கே.சி.பி.சந்திரபிரகாஷ், கோவை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் மதுராந்தகி இல்லம் என தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் வேலுமணியின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்களை முடக்கி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது