மதுரை: 
கில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை வானொலி நிலைய இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வானொலியில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் வழங்கி வந்த ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை அவருக்குப்பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகள் வழங்கியவர். பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் நடுவராகவும் செயல்பட்டவர். ஆன்மிகம், இலக்கியம் தொடா்பாக பல்வேறு தலைப்புகளில் ஏராளமான மேடை சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
மறைந்த இளசைச் சுந்தரத்தின் இறுதிச்சடங்கு மதுரை திரைத்துறை மின் மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.