பெங்களூரு:  தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள் கர்நாடக கருவூலத்தில் உள்ள நிலையில், அதை  தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி உள்பட அவரது நகைகள் தமிழ்நாடு திரும்புகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.அவரது மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது
அதன்காரணமாக அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட் டிருந்தன. அதன்படி,  28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி28 கிலோ தங்கம், வைரம் உள்பட அவரது நகைகள், உடைகள் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 800 கிலோ வெள்ளி நகைகள் பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு அனுப்ப பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இந்த நகைகள் 6 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்புடன் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. தமிழக உள்துறை முதன்மை செயலாளர் மார்ச் 6 மற்றும் 7ம் திகதிகளில் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது