சென்னை

இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட உள்ளது.

சென்னையில் புயல் மழை காரணமாக நேற்று வரை 2 தினங்களுக்கு புறநகர மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  நேற்று மாலை தென்னக ரயில்வே இன்று முதல் மீண்டும் புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என அறிவித்தது..

இந்நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாகத் தண்டவாள வழித்தடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இன்று  புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வீதத்தில் இயக்கப்படும். 

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மீண்டும் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும். 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும். 

இதேபோல சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் இடையே உள்ள வழித்தடத்தில், சிந்தாதிரிப்பேட்டையில் – வேளச்சேரி இடையே உள்ள வழித்தடத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும். 

திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் மட்டுமே இயக்கப்படும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.