சென்னை

ழை வெள்ளம் குறித்த புகார்களை அளிக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

சென்னையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி உள்ளது.  பல சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.   சென்னை மாநகராட்சி தீவிர சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.,

பல சுரங்க பாலங்களில் மழை நீர் புகுந்துள்ளன,  அவற்றை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.  பல இடங்களில் இதைப் போல் நீர் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனவே மழை  மற்றும் வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி

1013

044 25619206

044 25619207

044 25619208

ஆகிய எண்களிலும்

9445477205

என்னும் எண்ணில் வாட்ஸ்அப் வழியாகவும் புகார்களை அளிக்கலாம்.