சென்னை: 
மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கப்பட்டதாகச் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாகச் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விமானங்கள் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூர்,ஹைதராபாத் விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் இன்று பகல் 1.15 மணியிலிருந்து மாலை 6 மணி வரை விமானங்கள் வந்து தரையிறங்க இந்திய விமானநிலைய ஆணையம் தடைவிதித்தது. அதன்படி சென்னை விமானநிலையத்திற்கு இன்று மாலை 6 மணி வரை எந்த விமானமும் வந்து தரையிறங்கவில்லை. ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின.
இந்நிலையில் மாலை 6 மணியுடன் தடையை இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து, புனைவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்குச் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது.