சென்னை:
மிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான இதாயத்துல்லா தனது சொந்த செலவில் கட்டியுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். உர தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவிடம் தெரிவித்து மத்திய அரசிடம் பேசி உரத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை நத்தை வேகத்தில் தமிழக அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் தமிழக அரசின் செயல்பாட்டை ஊரே பாராட்டுகிறது என்று அவர் கூறினார்.