மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் டீனை ஆளும் கட்சி எம்.பி. கழிவறையை சுத்தம் செய்ய பணித்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து குழந்தையைப் பெற்ற தாயும் உயிரிழந்தார்.

இதனால் நான்டெட் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது இதனை ஏற்று இ.த.ச. 304 மற்றும் 34 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மருத்துவமனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மருத்துவமனை டீன் டாக்டர் ஷியாம்ராவ் வாக்கோடே உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…