அகமதாபாத்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டத்துக்கு ரசிகர்கள் குறைந்த அளவில் வந்துள்ளனர்.

இந்தியாவில்  இன்று முதல் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான  இன்றைய போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

 தொடக்க நாளான/ இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே  நடைபெற்றுவரும் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  முதல் நாள் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.  அகமதாபாத்தில்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் அதிக அளவில் இருக்கைகள் காளியாக இடக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாததால் “பார்வையாளர்கள் எங்கே” என இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியெல்லி வியாட், தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.