சென்னை: பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5லட்சமாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகஅரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், தற்போது குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது,  பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.