சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படம என அமைச்சர் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில்,  மானிய  கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.  இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய கேள்வி நேரத்தின்போது,   மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தமிழ்நாட்டில் உள்ள  சுங்கச்சாவடிகளை நீக்ககோரி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

இதற்கு பதில் அளித்த  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு,  “தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. கேரளாவைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதாலக் சுங்கச்சாவடிகள் உள்ளது.  மத்திய அரசின் சட்டத்திலேயே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது, குத்தகை காலம் முடிந்த பிறகும் பல சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இதை ஒன்றிய அரசு அமைச்சர் நிதின் கட்காரி இடம் வலியுறுத்தி அதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.