சென்னை:  கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதுபோல, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவையில் இன்று மறைந்த பாடகி வாணி ஜெயராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு,  உபயதுல்லா, கு.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று ச  பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.  அதேவேளையில் இனறு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், இன்று காலை சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற்குறிப்புகள், இரங்கல் தீர்மானத்தை வாசித்து நிறைவேற்றினார்.  மறைந்த பாடகி வாணி ஜெயராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு,  உபயதுல்லா, கு.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்  பின்னர் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுவாக சட்டசபை தொடங்கியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ல் கிருஷ்ணகிரி ஆணவக்கொலை, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது,  பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது; இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி என வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து,  காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது, பட்டாசு ஆலைகள் லாப நோக்கில் செயல்படுவதால் விபத்து ஏற்படுகிறது  காஞ்சிபுரம் விபத்து தொடர்பாக இழப்பீடும், உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து விவாதங்கள் நடைபெற உள்ளன. அதையடுத்து, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டதால். மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்கிறார். பின்னர் மசோதாவை முன்னெடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

ஏற்கனவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு கொடுத்த தெளிவான விளக்கம் பற்றியும் முதல்-அமைச்சர் எடுத்துரைக்கிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசுகிறார்கள். பின்னர் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் விவாதம் நேரமில்லா நேரத்தை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார். 25 மற்றும் 26-ந்தேதி சட்டசபைக்கு விடுமுறை. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் 29-ந்தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கி, 21-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 29-ந்தேதி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காலையிலும், போக்குவரத்து துறை மாலையிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.