சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் ‘பிறை தென்படாததால் நாளை முதல் (வெள்ளி) ரமலான் நோன்பு தொடக்கம் என தலைமை காஜி லாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.


ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் ரம்ரான் பிறை தென்பட்டதும் தங்களது நோன்பை தொடங்குவர். அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  நேற்று பிறை தென்படவில்லை. இதன் காரணமாக, வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) முதல்   நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.’ என  தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.