தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.  அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904ம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழாய்வு பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேசிய கனிமொழி, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிதிநிலையில் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. ஆய்வுப் பணிக்காக மத்திய அரசு ரூ.17 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. எனவே, கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.