சென்னை

ன்று அதிகாலை சுமார் 1 மணிக்குச் சென்னை மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை கடந்த 1945 ஆம் வருடம் ஜூன் மதம் 24 ஆம் தேதி பிறந்தவர் ஆவர்.  இவர் வாஜ்பாய் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த போது மத்திய அமைச்சராக பணியாற்றி வந்தார்.

இவர் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிந்தார்.  இவருடைய ராணுவ சேவைக்காக ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.  இவர் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இனை அமைச்சராக இருந்தார்.

இன்று அதிகாலை 1 மணிக்குத் தலித் எழில்மலை மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் காலமானர்.  இவருக்கு முனிரத்தினம் என்னும் மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.