சென்னை

மீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்ததற்கு மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவர் பதவியில் மகேந்திரன் இருந்தார்.   சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததையொட்டி மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார்.

சட்டப்பேரவை தேர்தலில் கமலஹாசன், மகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர்.   இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், “திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றிபெறாதது வருத்தமளிக்கிறது.  முன்பே மகேந்திரன் வந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும். மகேந்திரனை தேர்தலை அறிவித்த போதே எதிர்பார்த்தேன். மகேந்திரன் உள்ளிட்டோர்  லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்” எனக் கூறி உள்ளார்.