சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சுமார் 450 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்த படம்.

2019 ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் திரைப்படத்திற்குப் பின் திரைக்கு வரும் படம் எதற்கும் துணிந்தவன்.

தமிழ் நாட்டில் மட்டும் எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூல் 6.25 கோடி ரூபாய் ஆனதாக கூறப்படுகிறது, காப்பான் திரைப்படம் 6.10 கோடி ரூபாய் வசூலானது.

ஏழாம் அறிவு, மாற்றான் உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை குவித்த நிலையில் கடைசியாக 2019 ம் ஆண்டு வெளியான என்.ஜி.கே. முதல் நாள் 10 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது.

வார இறுதி நாட்களில் மேலும் வசூலை எதிர்பார்க்கும் படக்குழு எதற்கும் துணிந்தவன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறுவதோடு இயக்குனர் பாண்டிராஜ் உடன் சக்ஸஸ் பார்ட்டியும் கொண்டாடியுள்ளது.

இதற்கு முன் சூர்யா நடித்த சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.