சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில்  40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி முறைகேடு தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட  பல திரையுலகினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து  சட்டவிரோத பணப்பரிமாற்றப் புகார் தொடர்பாக சென்னையில் 47 இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் யார் வீடுகளில் சோதனைகள் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.